டவ்தே புயல் கண் பகுதி வலுவிழந்து கரையை கடந்தது

குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிராவில், டவ்தே புயல் கண் பகுதி வலுவிழந்து கரையை கடந்தது. அப்போது மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் கட்டங்களின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

டவ்தே புயல் காரணமாக குஜராத் மாநிலத்தின் சோம்நாத் மாவட்டம் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்துக்கும் இடையிலான சாலை முடங்கியது.

சாலை முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் அதனை அகற்றும் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களிலும் மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன.