இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா

இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,60,463 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம் மொத்த பாதிப்பு 16,64,350-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 21,362 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 14,03,052 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 364 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 18,369 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கோயம்புத்தூரில் 3,071 பேருக்கும், செங்கல்பட்டில் 2,299 பேருக்கும், ஈரோட்டில் 1,568 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.