ஆந்திர அரசின் அதிரடி அறிவிப்பு..!

கொரோனாவால் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் வைப்புத் தொகையாக ரூ.10 லட்சம் வங்கியில் செலுத்தப்படும்’ என, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜென்மோகன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:கொரோனாவால் தாய், தந்தையை இழந்து குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆந்திர மாநில அரசு, குழந்தைகளின் நலனுக்காக புதிய திட்டத்தை அறிவிக்கிறது. இதன்படி, கொரோனாவில் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஆந்திர அரசு சார்பில் ரூ.10 லட்சம் வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்படும்.