வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வுமையம்

rain-in-tamilnadu-heavy-rain-in-7-district
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென மழை பெய்த நிலையில், வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேடை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தகவல்.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் லேசான மழை பெய்த நிலையில், இரவில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அத்துடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் ஸ்ரீபெரும்புதூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.