மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு – தமிழகம் !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக மே 1 மற்றும் மே 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுபவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். தேர்தல் பணி தொடர்பான வாகனங்களை மட்டும் மே 01, 02 தேதிகளில் அனுமதிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது