நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு – கர்நாடகா !

கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்கு ஆளான மாநிலங்களில் கர்நாடகா மாநிலம் உள்ளது.இதில், தலைநகர் பெங்களூருவை கரோனா தொற்றை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலேயே பெருநகரங்களில் பெங்களூரு தான் வைரஸ் பாதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ளது.ஏற்கனவே தொற்று பரவலை தடுக்கும் விதமாக, இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாளை இரவு முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் என 4 மணி நேரம் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொது போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.