வன்னியர் உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார் !

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இது குறித்து பாமக கட்சியினரும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தது.

இந்நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த மசோதாவில் எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.