பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்கள் 22, 670 பேர் உட்பட ஒரு லட்சத்து 74 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு கலந்தாய்வில் 440 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே கலந்து கொள்கின்றன.

கல்லூரிகள் குறைந்ததால் கடந்த ஆண்டைவிட 11 ஆயிரத்து 784 இடங்கள் குறைந்து ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 870 இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

கடந்த ஆண்டு 464 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வு கிடைத்தன.பி.இ.,பி.டெக்.,படிப்புகளில் சேர விண்ணப்பித்தோருக்கான தரவரிசை http://tneaonline.org – என்ற இணையதளத்தில் காணலாம்.

சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 17 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.அரசு பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி ,விளையாட்டு வீரர், ராணுவ வீரர்களின் வாரிசுகள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.