போட்டோ எடுத்ததற்காக மலையாள நடிகை கைது

கேரளாவில் சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் படகில் ஷூ போட்டுக் கொண்டு ஏறி போட்டோ எடுத்ததற்காக மலையாள நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள டிவி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிமிஷா பிஜோ. சமீபத்தில் இவர் பம்பை நதியில் சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படும் படகில் ஏறி போட்டோ எடுத்துள்ளார்.

சாமி வைக்கும் படகில் ஷூ போட்டுக் கொண்டு ஏறி அவர் போட்டோ எடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.