உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் இன்றுமுதல் திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது கடந்த மார்ச் மாதம் முதல் கோரனாவால் மூடபட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் தாஜ்மஹாலை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தினமும் 5 ஆயிரம் பேர் வரை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதேபோல ஆக்ராவில் உள்ள கோட்டையும் இன்று முதல் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.