ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் – அமைச்சர் செங்கோட்டையன் !

அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளின் ஆரம்பகட்ட வேலையை இன்று தொடங்கிவைத்தார்.

அப்போது செய்தியர்களை சந்தித்த அவர் கூறியது,இன்றைய சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை.9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. மேலும் அதற்கு பதிலாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர் டேப் வழங்கப்படும் என தெரிவித்தார்.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணைகள் முதல்வருடன் ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.