கைது செய்யப்பட்டார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மும்பையில் கைது செய்யப்பட்டு பின் பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள டிராகன் பிளை கிளப்பில் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட ரெய்னா பெயிலில் விடுவிக்கப்பட்டார். கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாகவும், கூட்டமாக கூடியதாகவும், இரவில் நீண்ட நேரம் கிளப்பில் இருந்ததாக கூறி இவர் கைது செய்யப்பட்டார்.

சட்டப்பிரிவு 188, 269, 34 கீழ் ரெய்னா உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர். கிளப்பில் பணியாற்றிய நபர்களும் கைது செய்யப்பட்டனர். அதன்பின் இவர்கள் சில மணி நேரத்தில் பெயிலில் விடுவிக்கப்பட்டனர். சுரேஷ் ரெய்னா இப்படி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.