காஷ்மீர் எல்லையில் தாக்குதல் !

காஷ்மீரில் போர் ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது, பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாத அமைப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், இன்று காலை 9:30 மணி அளவில், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டது.

இந்திய ராணுவம் அதற்கு தக்க பதிலடி அளித்துள்ளது. எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து நான்காவது நாளாக எல்லை தாண்டி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது என்றார்.