வேளாண் கருப்பு சட்டங்களை ரத்து செய்யுங்கள் – ராகவ் சத்தா !

மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சத்தா வலியுறுத்தியுள்ளார்.புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர் கூறியது,மத்திய அரசு தனது அகங்காரத்தை விடுத்து,இந்த மூன்று கருப்பு சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது” என்றார்.மற்றும் இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கரோனா தடுக்க, இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்ய வேண்டும்.இதில் தாமதம் செய்தல் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றார்.