புதிய கட்டுப்பாட்டுகள் விதித்த ஏர் இந்தியா!

உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலையங்களில் தங்கியுள்ள ஏர் இந்தியா குழுவினர் அனைவரும் புதிய கரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு ஏர் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் புதிய வகை கரோனா தொற்று பரவிவருவதால், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குச் செல்லும் அனைத்து விமான சேவைகளும் வரும் 31ஆம் தேதிவரை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அனைத்து விமானிகள் மற்றும் கேபின் குழுவினருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், புதிய வகை கரோனா வைரசை கருத்தில் கொண்டு, அனைத்து உள்நாட்டு / சர்வதேச நிலையங்களிலும் பணி அமர்த்தப்பட்ட குழுவினரும், தங்களை தனிமைப்படுத்திகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.