உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம்.சந்தனகவுதர் காலமானார் !

உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் எம்.சந்தனகவுதர் குருகிராமில் இன்று காலமானார். இவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஐ.சி.யூ.,வில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை சனிக்கிழமை இரவு வரை நன்றாக இருந்ததாக கூறப்பட்டது.

ஆனால் நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு கரோனா தொற்று இருந்ததா என்ற தகவல் உறுதிசெய்யப்படவில்லை.இவர் கர்நாடகா மாநிலத்தில் 1958ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பிறந்தார்.உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கு முன்பு, 2016 செப்டம்பர் 22 அன்று கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆனார்.