முதல்வர் தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் – தமிழகம் !

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். தலைமை செயலகத்தில் காலை நடைபெற உள்ளது.கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

தொடர்ந்து, ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.