சசி தரூருக்கு சுமித்ரா மகாஜன் கேள்வி !

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மூத்த பாஜக தலைவர் சுமித்ரா மகாஜன் காலமானார் என்று தவறாக ட்விட்டரில் பதிவை போட்டார்.பின்பு அவர் நலமாக உள்ளார் என்பதை அறிந்து மன்னிப்பு கேட்டு பதிவை அகற்றினர்.

தற்போது சுமித்ரா மகாஜன், தனது மரணத்தை அறிவிப்பதில் காங்கிரசாருக்கு அப்படி என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தூர் நிர்வாகத்துடன் ஒரு சிறிய வெரிஃபிகேஷன் கூட செய்யாமல் செய்தி சேனல்கள் எனது மறைவு குறித்து ஒரு அறிக்கையை எவ்வாறு வெளியிட முடியும்? என் மருமகள் சசி தரூருக்கு ட்விட்டரில் பதில் கூறியுள்ளார். ஆனால் உறுதிப்படுத்தாமல் அறிவிப்பதில் என்ன அவசரம்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

சசி தரூர் மற்றொரு ட்வீட்டில், நேற்றிரவு தவறான தகவலின் அடிப்படையில் நான் அவ்வாறு பதிவிட்டு விட்டேன். எனது மன்னிப்பை தெரிவிக்க சுமித்ரா மகாஜன் ஜியின் மகனிடம் பேசினேன். அவர் மிகவும் கருணையும் புரிந்துணர்வும் கொண்டவர்.

சுமித்ரா மகாஜன் மிகவும் நன்றாக உள்ளார் என்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்.