திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்

3-வது கட்ட பிரசாரத்தை மு.க. ஸ்டாலின் இன்று விழுப்புரத்தில் தொடங்கினார். 

மனுக்களை வாங்கிய மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அதன்பின்னர் பொதுமக்களிடையே கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

நாங்கள் சொல்வதை ஆளுங்கட்சியினர் செய்து வருகின்றனர். மக்கள் தெரிவிக்கும் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் நகரம் மற்றும் காணை பகுதி விழாக்கோலம் பூண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் தி.மு.க. கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தது.

முன்னதாக விழுப்புரம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. துணை பொது செயலாளர் பொன்முடி தலைமையில் வாணவேடிக்கை, மேளதாளத்துடன் உறசாக வரவேற்பு அளிக்கப்பட்டது.