இனி தபால் அலுவலக திட்டங்களுக்கும் இணைய வங்கி உண்டு..!

வங்கிக் கணக்குகள் உள்ளவர்கள் இணைய வங்கியியல் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்த வசதி தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இப்போது வாடிக்கையாளர்கள் எந்த இடையூறும் இல்லாமல் இந்திய அஞ்சல் இணைய வங்கியைப் பயன்படுத்தலாம். தபால் நிலையத்தின் (Post Office) நெட் பேங்கிங் மூலம் நீங்கள் பண பரிவர்த்தனை செய்யலாம். அதனுடன் RD, PF, NSC திட்டம் தொடர்பான அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்தே முடித்துக்கொள்ள முடியும்.

தபால் அலுவலக இணைய வங்கி வசதியைப் (Net Banking) பயன்படுத்த சில நிபந்தனைகள் உள்ளன. தபால் அலுவலக இணையதளத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, KYC தொடர்பான ஆவணங்கள், செல்லுபடியாகும் ஒற்றை அல்லது கூட்டுக் கணக்கு தேவை. இது தவிர, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் பான் எண் ஆகியவற்றை கணக்கில் பதிவு செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நபர் மட்டுமே தனது கணக்கைப் பயன்படுத்த முடியும்.