மலக்குடலில் மறைத்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

மலக்குடலில் மறைத்து கடத்திவரப்பட்ட ரூ.2.85 கோடி மதிப்புடைய ‘பேஸ்ட்’வடிவிலான 5.74 கிலோ தங்கம் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் பிப்ரவரி 1 ஆம் தேதி கோவை விமானநிலையத்திற்கு வந்த திருச்சி, சிவகங்கை, சென்னை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 5 பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில், அவர்கள் 5 பேரும் மலக்குடலில் ‘பேஸ்ட்’வடிவிலான தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அதில் ஒருவர் பதற்றமாக இருந்ததை அறிந்த அதிகாரிகள், அவரிடம் மேற்கொண்ட சோதனையில் 324 கிராம் எடைகொண்ட தங்கத்தை 28 ‘கேப்சூல்கள்’களாக விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது