மீனவர்கள் 40 பேரை இலங்கை கடற்படையினர் கைது – தமிழகம் !

ராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீனவர் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 40 மீனவர்களை கைது செய்தனர்.

மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்த அவர்கள், இலங்கை காரைநகர் கடற்படை முகாமிற்கு மீனவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

இதனையடுத்து ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.