வங்கிகளுக்கு தொடர் விடுமுறை கிடையாது !

nationwide bank strike
வங்கிகள் வேலைநிறுத்தம்

இந்த மாதம் தொடர் வங்கி விடுமுறை வருவதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.மார்ச்.27 மாதத்தின் 4வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் செயல்படாது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை . அடுத்த நாள் திங்கட்கிழமை ஹோலி பண்டிகை . இப்படி தொடர்ந்து 3 நாட்கள் வங்கிப்பணிகள் பாதிக்கப்படுகிறது.

இடையில் மார்ச் 30-ஆம் தேதி வேலைநாளாக உள்ளது. 31ஆம் தேதி வேலைநாளாக இருந்தாலும் நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் பொதுமக்களுக்கான வங்கி சேவை முழுவதுமாக கிடைக்காது என்று தகவல் பரவி வந்தது.

ஏப்ரல் 1ஆம் தேதி வருடாந்திர கணக்குகளை முடிக்கும் நாள்.அடுத்து ஏப்ரல் 2ம் தேதி புனித வெள்ளி விடுமுறை நாள் ஆகும். பின்னர் 3ம் தேதி வங்கிகள் திறக்கும் என்றாலும் அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும்.

இப்படி கிட்டத்தட்ட 1 வார காலம் விடுமுறை இருக்கும் பொருட்டு மக்கள் தங்கள் வேலைகளை முடிக்க வங்கியில் கூட்டமாக செய்கிறார்கள்.தற்போது,வங்கிகளுக்கு தொடர் விடுமுறை கிடையாது என்றும் தமிழ்நாட்டில் மார்ச் 29 மற்றும் 31ம் தேதி,ஏப்ரல் 1ம் தேதி  வங்கிகள் செயல்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது