இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர் !

நாகப்பட்டினம், ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில்,இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் தமிழக மீனவர்கள் மீது எந்தவித வழக்கும் தொடராமல் படகுடன் விடுதலை செய்து தாயகம் திரும்பி அனுப்புமாறு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து திருகோணமலை மற்றும் காரைநகர் கடற்படை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்களையும் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தமது படகுகளுடன் நாடு திரும்பியுள்ளனர்.