சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா தொற்று !

கரோனா தொற்று மீண்டும் இந்தியாவில் பரவ தொடங்கி உள்ளது.இந்நிலையில் ,இதன் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த பரவலுக்கு காரணம் மக்கள் முகக்கவசம் அணியாதது தான் என்று அரசு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்நிலையில்,சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அவருக்கு கரோனாவின் லேசான அறிகுறி இருந்துள்ளது. இதனையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார்.

அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளது,தான் வீட்டிலேயே தனிப்படுத்திக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் . மேலும் தனது குடும்பத்தில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.