பெண்கள் புர்கா அணியத் தடை – இலங்கை !

இலங்கையில் பெண்கள் புர்கா அணியத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.இந்த ஆணைக்கு இனி நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவேண்டும். விரைவில் இந்த ஆணை அமலுக்கு வரும் என்கிறார்கள் அதிகாரிகள்.

பெண்கள் முகத்தை மூடும் புர்கா நேரடியாக நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த புர்கா உடை சமீபத்தில்தான் இலங்கையில் பெண்கள் அணிகிறார்கள்.

ஆனால், இதற்கு முன் இலங்கையில் இருந்த முஸ்லிம்கள் யாரும் புர்கா அணிந்தது இல்லை.முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய விதிக்கப்பட்டிருந்த தடையில் தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில், இப்போது நிரந்தரமாகத் தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.