பண்டிகைக்காக இயக்கப்படும் கூடுதல் பஸ்கள் !

சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள்
சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் பண்டிகை காலங்கள் வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன.இந்த மாதம் 14-ம் தேதி ஆயுத பூஜை, 15-ம் தேதி விஜயதசமி விடுமுறை நாட்களாகும். மேலும் வரும் 16-ம் தேதியும், 17-ம் தேதியும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாகும்.

இந்த தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊருக்கு செல்ல பயணப்படுவர்.இதன் காரணமாக தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, தென்காசி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க : தமிழகத்தில் திறக்கப்படும் 1 முதல் 8ம் வகுப்புகள் !