அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்களுக்கு அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு துறையில் உள்ளவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்சை சேர்ந்த மரியா ரெஸ்சா, ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி முராடோவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை பாதுகாக்க இவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காக விருது வழங்கப்படுவதாக பரிசுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பண்டிகைக்காக இயக்கப்படும் கூடுதல் பஸ்கள் !