கொரோனாவில் வேலை இழந்தவர்களுக்கு இ ரிக்‌ஷா வழங்கும் நடிகர்

வட நாட்டு கிராம பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் நீண்ட தூரம் சென்று படிக்க முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திய நிலையில் அவர்கள் அனைவருக்கும் சைக்கிள் வாங்கித் தந்தார் சோனு சூத். கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்தவர்கள் பலர் அவரிடம் உதவி கோரினர்.

இ ரிக்‌ஷா வழங்குவதன் மூலம் அவர்கள் ஒரு தொழில் தொடங்கலாம். சிறிய உதவி செய்வதன் மூலம் மக்களை அவர்களே சுயமாக சம்பாதித்து சுயமாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு உயர்த்தும் என்றார். சோனு சூட்டின் இந்த மனிதாபிமான உதவிகாக அவரை இணையதளங்கள் சிற்ந்த மனித நேயம் மிக்கவர் என்று உலக அளவில் தேர்வு செய்து அறிவித்தது. இதுபற்றி கருத்து தெரிவித்த சோனு சூத். என்னுடைய மக்களுக்கு உதவ வேண்டியது என் கடமை என்றார்.