ரிசர்வ் வங்கிக்கு மூன்று இயக்குநர்கள் நியமனம்

ரிசரவ் வங்கியின் மூன்று புதிய செயல் இயக்குநர்களாக சுப்ரமணியன், ராத்தோ, ரோஹித் ஜெயின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று பேருக்கும் பொறுப்பு இலாக்காகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அந்நிய செலாவணி, நிதிச்சந்தை, உள்நாட்டு கடன் ஆகிய துறைகளை ஆர்.சுப்ரமணியம் நிர்வகிப்பார்.

ஆர்.எஸ். ராத்தோவுக்கு வெளிநாட்டு முதலீடு, சட்டம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ரோஹித் ஜெயினுக்கு மேற்பார்வை பிரிவின் நிர்வாகம் ஒதுக்கப்பட்டுள்ளது.