சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா

சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஐஐடி மூடப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் கடந்த 14 நாட்களில் மட்டும் 71 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப் படுத்தப் படுள்ளது. மாணவர் விடுதி மற்றும் உணவகம் மூலம் பரவியதாக தெரியவந்ததையடுத்து விடுதியும் உணவகமும் உடனடியாக மூடப்பட்டது. இது தவிர ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்லைன் மூலம் படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்பட கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.