பிரதமர் மோடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய அநீதி இழைத்து விட்டதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சோனியா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் வேளாண் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் விவசாயிகளுக்கு நரேந்திர மோடி அநீதி இழைத்துவிட்டார்.
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபிலிருந்து டெல்லி நோக்கி அக்டோபர் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை ராகுல்காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெறும். இதில் பஞ்சாப் விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.