சென்னையில் ரவுடிசத்தை தடுக்க நடவடிக்கை

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார்.

அப்போது சென்னையில் ரவுடிசம் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்தவர், சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தற்போது 16 ரவுடிகள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். முன்னதாக இன்று காலை சென்னையில் பிரபல ரவுடியான காக்காத்தோப்பு பாலாஜியை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.