தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 14,014 பேரும் வெளிநாடு மற்றும் பிற மாநிலத்தவர் 2 பேரையும் சேர்த்து 14,016 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

267 பேர் உயிரிழந்து உள்ளனர். 25,895 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 23 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 32 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 77,295 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 14,016 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,53,721 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,99,68,038 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.