நாளை முதல் 11ஆம் வகுப்பு சேர்க்கை தொடக்கம்

tn-news-schools-and-colleges-holiday-in-kanyakumari
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து நாளை முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்த பின் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

கரூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், உள்கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிகும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தனியார் பள்ளிகள் மாணவ -மாணவிகளிடம் 75 சதவீதம் கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்என அறிவுறுத்தினார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை தொடங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது.