நக்சலைட் 6 பேர் சுட்டு கொலை

ஆந்திராவில், விசாகப்பட்டினம் வனப்பகுதியில் அதிரடிப்படையினருடன் நடந்த மோதலில் நக்சலைட் அமைப்பை சேர்ந்த 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஆந்திராவில், நக்சலைட்களை ஒடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர், விசாகப்பட்டினத்தின் கொய்யுரு பிளாக்கில், தீகலமேட்டா வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிரடிப்படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 6 நக்சலைட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த மோதலின் போது நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர்கள் தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, போலீசார் ஹெலிகாப்டர் மூலம் வனப்பகுதியில் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.