தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசனை

வரவிருக்கும் 2021 வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து 80 சி பிரிவில் வரம்பை ரூ .1,50,000 லிருந்து 3,00,000 ஆக உயர்த்தக்கூடும் என்று தெரிகிறது.

பிரபல வருமானவரி நிபுணர் அங்கித் செஹ்ரா வும் இதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாகவும் இது அதிக முதலீட்டை அதிகரிக்கும் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என சொல்லியிருக்கிறார்.

பிரிவு 80 சி தவிர, தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்துவது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்கும் என்று இந்த முறை எதிர்பார்க்கலாம் என்றார்.