ஆபாச வீடியோக்களை ரூ.9 கோடிக்கு விற்பனை செய்ய பிளான்போட்ட ராஜ் குந்த்ரா..!

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தனது மொபைல் போன், லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்கில் 119 ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சமீபத்தில் 15,000 பக்கங்கள் கொண்ட துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜ் குந்த்ராவும் அவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட ரேயானும் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் ரொக்க ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது. செவ்வாய்க்கிழமை இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கணவரின் ஜாமீன் குறித்து ஷில்பா ஷெட்டி சமூக வலைத்தளத்தில் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்து வெளியிட்ட தகவலில் ‘மோசமான புயலுக்கு பிறகு அழகான விஷயங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

ராஜ் குந்த்ராவிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன், லேப்டாப், ஹார்டு டிஸ்க் போன்றவற்றில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வீடியோக்களை ராஜ் குந்த்ரா ரூ.9 கோடிக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், அதற்குள் பறிமுதல் செய்துவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். ராஜ் குந்த்ரா ஹாட்ஷாட் என்ற மொபைல் ஆப் மூலம் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்தார். அதுவும் கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் இருந்த துணை நடிகைகளை பயன்படுத்தி இக்காரியத்தில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நாளை வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்