ரூ. 25 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி !

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து, வெளியிட்ட வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.

இந்த விவகாரத்தில் ஷில்பாவுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது.இந்நிலையில்,பாலிவுட் நடிகர் ஷில்பா ஷெட்டி தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் அவதூறான விஷயங்களுக்கு எதிராக கட்டுப்பாடுகளை கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

அதில் தனது கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட பிறகு சமூகவலைத்தளங்களில் பரவி வரும் பல தகவல்கள் அவதூறு மற்றும் அவரது நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாக ஷில்பா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் என்னை பற்றிய தவறான செய்திகளை அகற்றுவதுடன் ரூ. 25 கோடி நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.மேலும் தன்னை பற்றி அவதூறு பரப்பும் சில ஊடக நிறுவனங்களிடமிருந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தன்னை பற்றி வலம் வரும் கதைகளையும் வீடியோக்களையும் நீக்கும்படி கேட்டுக்கொண்டார்.