இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் இருவருக்கு கொரோனா பாதிப்பு !

இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட ஜூனியர் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.தற்போது யுஸ்வேந்திர சாஹல் மற்றும் கிருஷ்ணப்ப கவுதம் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று நடந்த போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, டி-20 தொடரை இந்திய அணி இழந்தது.

மேலும் இந்திய வீரர் குருணால் பாண்ட்யாவுக்கு கடந்த 27 ஆம் தேதி, கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா, சாஹல், கிருஷ்ணப்பா கவுதம், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர் ஆகிய 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் இலங்கையின் சுகாதார நெறிமுறை நெறிமுறைப்படி பாதிப்பிற்கு ஆளானவராகள் குறைந்தது பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.அவர்களை தவிர்த்து பிற அனைத்து வீரர்களும் இன்று மாலை இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.