மீண்டும் அதிகரிக்க தொடங்கும் கொரோனா பாதிப்பு !

coronavirus
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகம் இருந்தது.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைய தொடங்கியது.தற்போது இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 44,230 ஆக உள்ளது.தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 4,05,155 ஆக உள்ளது.

இதுவரை இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,15,72,344 .இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,07,43,972 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,230 .மேலும் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 555 ஆக உள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.