ஷாரூக் மகன் ‘ஜாமின்’ மனு மீது 20ம் தேதி தீர்ப்பு

போதைப் பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யானின், ‘ஜாமின்’ மனு மீதான தீர்ப்பு, 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு, சொகுசு கப்பல் சமீபத்தில் சென்றது. அதில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யான் கான் மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர்.அப்போது தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர் ஆர்யான் கான் உட்பட எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் ஜாமின் கோரி ஆர்யான் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி, ஆர்யான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான இரு தரப்பு வாதங்கள் நேற்று முடிந்த நிலையில், தீர்ப்பை 20ம் தேதிக்கு நீதிபதி வி.வி.பாட்டீல் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: விஜயதசமி அன்று செய்யவேண்டிய 3 விஷயங்கள்..!