சென்னையை சேர்ந்த தடகள பயிற்சியாளர் பாலியல் புகாரில் கைது !

சென்னையில் தடகள பயிற்சியாளர் ஒருவர் பயிற்சி பெற்று வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

சம்பந்தப்பட்ட பெண் காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் அனுப்பிய நிலையில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் என்பவரை போலீசார் விசாரித்து வந்தனர்.

தடகள பயிற்சி பெற்று வந்த 19 வயது பெண்ணுக்கு அவரது பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் பயிற்சியின் போது பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக தெரியவந்துள்ளது.

விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட நாகராஜன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.