மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் காலமானார் !

தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி மக்களை பாதித்துள்ளது. இந்த இரண்டாம் அலையில் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலபேர் இறந்துள்ளனர்.

தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 81.

ஆந்திராவில் பிறந்த இவர் வளர்ந்தது, படித்தது சென்னையில் தான்.இவர் சிஐடியு தொழிற்சங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொழில்சங்கத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.