விஜய் சேதுபதியின் புதுப் படத்திற்கான தடை நீக்கம்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் மாமனிதன். இப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது. அப்போது, அபிராமி மெகா மாஸ் நிறுவனத்துடன் ,இப்படத்தின் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா  விநியோக உரிமை தொடர்பாக எந்த ஒப்பந்தமும்  செய்யவில்லை. எனவே அபிராமி மால் கூறியுள்ள அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை அதனால் படத்தை வெளிவிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த இருதரப்பு வாதிப்புகளையும் கேட்ட நீதிபதி மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி அதிரடி உத்தரவிட்டார்.