பணிக்கு சென்ற ஆயுதப்படை காவலர் வெட்டிக்கொலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பழைய சீவரத்தைச் சேர்ந்தவர் இன்பரசு. புழல் சிறையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய காவலர் இன்பரசு இருச்சக்கர வாகனத்தில் பணிக்கு சென்ற போது 2 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காவலரை வெட்டிக் கொலை செய்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.