மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசிய சீமான்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட, 7 பேர் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக சீமான் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட, 7 பேர் விடுதலையில், நாங்கள் எப்படி உறுதியாக இருக்கிறோமோ, அதேபோன்று முதலமைச்சரும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், ‘7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கின் முடிவைப் பொறுத்து நாம் முடிவெடுப்போம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாகக் கூறினார். காங்கிரஸ் 7 பேர் விடுதலை எதிர்ப்பதைப் பற்றி கண்டு கொள்ள வேண்டாம் என்றும் சீமான் கூறினார்.