பிளஸ்டூ தேர்வு: கல்வியாளர்கள் உடன் நாளை ஆலோசனை

பிளஸ்டூ தேர்வு குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பின் முடிவை முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து, பிரதமர் மோடி அறிவித்தார். மாநிலங்களை பொறுத்த வரையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டது.

இன்று மாவட்ட கல்வி அலுவலர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,பிளஸ்டூ தேர்வு குறித்து கல்வியாளர்கள், பெற்றோர் , பொதுமக்களிடமிருந்து கருத்துகள் வந்துள்ளன. இது தொடர்பாக மற்ற மாநிலங்கள் எடுத்துள்ள முடிவையும் கவனித்து வருகிறோம். தேர்வு நடத்துவது குறித்து . சட்டமன்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை நடத்திய பின்னர் மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை கேட்கப்பட உள்ளது. அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் அடிப்படையில் முதல்வர் முடிவை அறிவிப்பார். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.