எல்லா நாடுகளும் பருவநிலை அவசரநிலை அறிவிக்க வேண்டும்

உலகில் உள்ள எல்லா நாடுகளும் பருவநிலை அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார் ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ்.

38 நாடுகள் ஏற்கெனவே பருவநிலை அவசர நிலையை அறிவித்துள்ளன. இதே போன்ற அவசர நிலையை உலகில் உள்ள எல்லா நாடுகளும் அறிவிக்கவேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் தெரிவித்த குட்டரெஸ், கார்பன் நியூட்ராலிட்டி என்ற நிலையை எட்டும் வரை இந்த அவசர நிலை தொடரவேண்டும் என்றும் கூறினார்.