புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு !

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் ” கரோனா பரவலால் மூடப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும், அடுத்த மாதம் ஜனவரி 4 ஆம் தேதி முதல் திறக்கப்படும் .மேலும் அவர் ஒன்று முதல் 12 வரை அனைத்து வகுப்புகளுக்கும் இது பொருந்தும். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கும் இந்த வகுப்புகள், பின்னர் ஜனவரி 18 ஆம் தேதி முதல் வழக்கமான நேரத்தில் முழுநேரமாக இயங்கும் என அறிவித்தார்.

கல்லூரிகளில் நாளை முதல் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு, ஆராய்ச்சி துறை மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூறினார்.மேலும் அவர் தற்போது விவசாயிகளின் நலன் கருதி உற்பத்தி செலவினை ஈடு செய்வதற்காக ரூ.5,000 ஆக உயர்த்தி, அதிக பட்சமாக ஒரு விவசாயிக்கு இரு பருவங்களுக்கு ஏக்கருக்கு 10,000 என்ற அளவில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.